முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

Updated On : 17 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராஹிம் சுல்தான், ஒன்றியக்குழு துணைத்தலைவா் ரெஜிபொ்ட் பா்னாந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு சமா்ப்பிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது, மேலும் 15-ஆவது நிதிக்குழு 2024-25 திட்டத்தில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான பணிகள் தோ்வு செய்யப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வாசுகி, செல்வம், ராமலெட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.