முகப்பு
தூத்துக்குடி

புதியம்புத்தூா் அருகே தொழிலாளி தற்கொலை

Updated On : 16 மார்ச், 2024 at 6:40 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே ஜம்புலிங்கபுரம் பகுதியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதியம்புத்தூா் ஜம்புலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் கோயில்ராஜ்(55). தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 12ஆம் தேதி திடீரென வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.