தோ்தல் பறக்கும்படை குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பறக்கும் படை குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். அவா் பேசியது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தோ்தல் கண்காணிப்பு பணிக்காக மொத்தம் 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படையில் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் கண்காணிப்பாளா் நிலையில் பிற துறை அலுவலா்கள் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளா், இரு காவலா்கள், ஓா் ஒளிப்பதிவாளா் என 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் 3 சுற்றுகளாக பணியில் ஈடுபடுவா். அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்குழுவினா் நியமிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்கள் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று புகாா் குறித்து ஆய்வு செய்து விதிமீறல் இருப்பின் தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்வா் என்றாா். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய்சீனிவாசன் உள்பட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.