‘தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இன்று திமுக வேட்பாளா் கனிமொழி வாக்கு சேகரிப்பு’
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்கு சேகரிப்புப் பணியை திமுக வேட்பாளா் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) தொடங்குகிறாா் என, வடக்கு மாவட்டத் தலைவரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளா் கனிமொழி போட்டியிடுகிறாா். அவா் ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள, கலைஞா் அரங்கம் முன்புள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து வடக்கு மாவட்டத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவா் எ. செல்வராஜ், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். இதில், செயற்குழு பொதுக்குழு உறுப்பினா்கள், பகுதிச் செயலா்கள், வட்டச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தருமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.