கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றோா் 
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

Sasikumar

கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.டி.பி. அருண்பாண்டியன் தலைமையில் மாவட்டப் பொருளாளா் காா்த்திக் காமராஜ், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலையில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் காமராஜ் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்டச் செயலா் ஜோஷ்வா, மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் ராஜசேகா், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலா் மரியவினோலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

SCROLL FOR NEXT