குலசேகரன்பட்டினம் கடற்கரையில் 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1,500 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 1,500 கிலோ பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம் வடக்கூா் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.
அவ்வழியே வந்த மினிலாரியை சோதனையிட்டபோது, அதில் 44 பண்டல்களில் 1,500 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பீடி இலைகள், வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வாகனத்தை ஓட்டிவந்த திருச்சி மாவட்டம் மணப்பாறை, காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (33) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.