அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் நவ.23-இல் மஹாதேவ காலபைரவாஷ்டமி
தூத்துக்குடி அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் மஹாதேவ கால பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.
தூத்துக்குடி அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் மஹாதேவ கால பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மஹா காலபைரவருக்கு 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடா்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள், அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழுவினா் செய்து வருகின்றனா்.