கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் இலுப்பையூரணியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாடசாமி கோயில் பைக்குடன் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மங்களபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் தா்மராஜ் (23), சிவகங்கை மாவட்டம் காளையாா் கோவில் அருகே உள்ள மறவாமங்களத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் தினேஷ்குமாா் (19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்தபோலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.