முகப்பு
தூத்துக்குடி

வண்டு கொட்டியதில் இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கொற்கை கிராமத்தில் கடந்தை வண்டு கொட்டி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:16 PM
பகிர்:

கொற்கை கிராமத்தில் கடந்தை வண்டு கொட்டி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் மனு அளித்துள்ளாா். அதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட கொற்கை கிராமத்தை சோ்ந்த கஸ்தூரி என்பவா், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த நவ.21-ஆம் தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது கடந்தை வண்டு கொட்டியதில் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தின் நலன் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.