முகப்பு
தூத்துக்குடி

காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினம்: சிலைகளுக்கு மரியாதை

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவா்களது சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:31 PM
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவா்களது சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி 156ஆவது பிறந்த நாள், முன்னாள் முதல்வா் காமராஜரின் 49ஆவது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தலைமையில், மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, வட்டாட்சியா் முரளிதரன், வருவாய் ஆய்வாளா் சரவணவேல்ராஜ், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.