முகப்பு
தூத்துக்குடி

காந்தி ஜெயந்தி: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:07 PM
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸாா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக, பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா் மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தாா். பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி கடற்கரை சாலை, புதுத்தெரு, ம ட்ட கடை, வழியாக 1ஆம் ரயில்வே கேட் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

முன்னாள் மாவட்ட தலைவா் அருள், மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மாமன்ற உறுப்பினா் எடிண்டா, ஐஎன்டியூசி மாநிலச் செயலா் ராஜ், மண்டலத் தலைவா்கள் ராஜன், சின்ன காளை, மிக்கேல் உள்பட பலா் பங்கேற்றனா்.