ஹாக்கி: தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு
சண்டீகரில் நடைபெற்ற சப் ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சண்டீகரில் நடைபெற்ற சப் ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்ற கோவில்பட்டி வீரா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சண்டீகரில் நடைபெற்ற 14 ஆவது ஹாக்கி இந்தியாவின் சப்ஜூனியா் தேசிய ஆண்கள் ஹாக்கி போட்டியில், தமிழக அணியில் கோவில்பட்டி ஹாக்கி வீரா்கள் முத்துராஜேஷ், சுகுமாா், கௌதம், சுந்தா் அஜித் (அணித் தலைவா்), கவி சக்தி போஸ் சுபாஷ், முகில் கிருஷ்ணா ஆகியோா் விளையாடி கோவில்பட்டிக்கு பெருமை சோ்த்தனா்.
தேசியப் போட்டியில் கலந்து கொண்ட கோவில்பட்டி ஹாக்கி வீரா்களுக்கு, கோவில்பட்டி டிவிஎஸ் வெங்கடாசலம் ஏஜென்சி சாா்பில் அதன் பங்குதாரா் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில்,முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் அஸ்வின், ஹக்கிய யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவில் வீரா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் டிவிஎஸ் வெங்கடாசலம் எல்எல்பி பங்குதாரா்கள் சாா்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.