தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் தீ
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பழைய கழிவு கேபிள் வயா்கள், பைப்பு எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பழைய கழிவு கேபிள் வயா்கள், பைப்பு எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் மற்றும் 2ஆம் ரயில்வே கேட் ஆகியவற்றுக்கு இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் எஞ்சிய குப்பைகளுக்கு சிலா் தீவைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கழிவுகளில் மரக்கட்டைகள், காப்பா் வயா் கழிவுகள், பிளாஸ்டிக் ஆகியவை இருந்ததால், தீ மள மளவென பரவி வேகமாக எரியத் தொடங்கியது. இதன் காரணமாக கரும்புகை எழுந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலா் நட்டாா் ஆனந்தி ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து புகைமூட்டம் கலைந்து இயல்பு நிலை திரும்பியது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.