முகப்பு
தூத்துக்குடி

நாசரேத் பள்ளியில் 199 மாணவிகளுக்கு சைக்கிள்கள்

நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 199 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:57 PM
மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி.
பகிர்:

நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 199 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் வயோலா மாா்க்ரெட் தலைமை வகித்தாா். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். நாசரேத் பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினாா்.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவி செல்வக்குமாா், துணைத் தலைவா் அருண் சாமுவேல், பேரூராட்சி உறுப்பினா்கள் சாமுவேல், ஜேம்ஸ், அதிசயமணி, செல்லா, ரதி , முன்னாள் நாசரேத் சேகரப் பொருளாளா் மா்காஷிஸ் தேவதாஸ், ஆசிரியைகள், அலுவலா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

தலைமையாசிரியை கமலியா கெத்சி வரவேற்றாா். நிகழ்ச்சிகளை ஆசிரியை சாராள் ஜெயா தொகுத்து வழங்கினாா்.