திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை சுவாமி தரிசனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. 
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் முன்னாள் அமைச்சா் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சிறப்பு யாகம் செய்து வழிபட்டாா்.

திருச்செந்தூா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தரிசனம் செய்த அவா், சத்ரு சம்ஹார மூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், வள்ளிக்குகை பகுதியில் சத்ரு சம்ஹார யாகம் செய்தும் வழிபட்டாா்.

பின்னா் தனியாா் தங்கும் விடுதியில் முன்னாள் அமைச்சா் வேலுமணியை அதிமுக தெற்கு மாவட்ட செயலா் சண்முகநாதன் தலைமையில் ஒன்றிய செயலா்கள் விஜயகுமாா், பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் சந்தித்தனா்.

சுவடுகள்...

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தெ.ஞா. என்னும் தெய்விக ஞானக் குழல்

தமிழ் கற்பதைத் தவமாய் கருதியவர்...

வானுக்கு வரம்...

SCROLL FOR NEXT