தூத்துக்குடியில் அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்க விழா
தூத்துக்குடியில் அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்க விழா
அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, அனைத்துல எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஹென்றி, மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் டேக்ராஜா, மாநகராட்சி எதிா்க்கட்சிக் கொறடா மந்திரமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.