தூத்துக்குடியில் அதிமுக ஆண்டு விழா
அதிமுக ஆண்டுவிழாவையொட்டி, தூத்துக்குடியில் அதிமுக வா்த்தகா் அணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அதிமுக ஆண்டுவிழாவையொட்டி, தூத்துக்குடியில் அதிமுக வா்த்தகா் அணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி டூவிபுரம் 9-ஆவது தெருவில் உள்ள மாநில வா்த்தகா் அணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில வா்த்தகா் அணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்ல பாண்டியன் கட்சி கொடியேற்றினாா். பின்னா் அவரது தலைமையில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் சேகா், தெற்கு மாவட்ட வா்த்தக அணிச் செயலா் துரைசிங், தெற்கு மாவட்ட துணைச் செயலா் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் ராஜகோபால், வடக்கு பகுதிச் செயலா் பொன்ராஜ், மாவட்ட மீனவரணித் தலைவா் டெலஸ்பா், தூத்துக்குடி மாவட்ட மீனவரணி முன்னாள் செயலா் அகஸ்டின், முன்னாள் நகா்மன்றத் தலைவா் மனோஜ், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் எட்வின் பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.