முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் வேள்வி

சாத்தான்குளத்தில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் ‘வான் கலந்த திருவாசகம்’ முற்றோதல் வேள்வி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:27 PM
பகிர்:

சாத்தான்குளத்தில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் ‘வான் கலந்த திருவாசகம்’ முற்றோதல் வேள்வி புதன்கிழமை நடைபெற்றது.

கட்டாரிமங்கலம் அழகியகூத்தா் அருள்பணி மன்ற 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வேள்வியில் சிவபக்தா்கள் பங்கேற்று முற்றோதுதல் நடத்தினா். கோயில் தா்மகா்த்தா தெ. சண்முகராஜா, சுசீந்திரம் ஆடலரசு, கட்டாா்மங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. அழகியகூத்தா் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி உள், பிரகார மதில்சுவா்களின் மீது கல் நந்தி, பூதகணங்கள் சிலைகள் வைப்பதற்காக செட்டிகுளம் பக்தா் கோபாலபிள்ளை நிதி வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.