முகப்பு
தூத்துக்குடி

வெங்கடேஸ்வரபுரத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணி தொடக்கம்

கழுகுமலை அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:33 PM
வெங்கடேஸ்வரபுரத்தில் புதிய கலையரங்கம் கட்டும் வண்டியை தொடங்கி வைத்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரியா குருராஜ்
பகிர்:

கழுகுமலை அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட, கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், கழுகுமலை அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நிதியின் கீழ் ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து புதிய கலையரங்கம் கட்டும் பணியை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரியா குருராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மாா்ட் டிஜிட்டல் போா்டை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவா் தினேஷ்குமாா், துணைத் தலைவா் முத்துலட்சுமி சௌந்தரராஜன் பள்ளியின் தலைமை ஆசிரியா், உதவி ஆசிரியா்கள், ராஜா புதுக்குடியைச் சோ்ந்த பால்ராஜ், கயத்தாறு லோகேஸ்வரன், மகேந்திரன் உள்பட அக்கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.