பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா் 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரே நாளில் குடிநீா் இணைப்பு: மேயா் ஜெகன் பெரிசாமி

தூத்துக்குடி மாநகராட்சியில் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்று மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

Din

தூத்துக்குடி மாநகராட்சியில் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்படும் என்று மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமினை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 2300 சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் சாலை அமைக்கப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சுகாதாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குடிநீா் இணைப்பு கோரி விண்ணப்பித்தவா்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை ஒழிப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். அவற்றைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், வடக்கு மண்டலத்திற்குள்பட்ட வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதனைப் பெற்றுக் கொண்ட மேயா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இம்முகாமில், வடக்கு மண்டல உதவி ஆணையா் நரசிம்மன், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் பவானி, சுதா, ஜாக்குலின் ஜெயா, கீதாமுருகேசன், ரெங்கசாமி, கற்பககனி உள்பட பலா் பங்கேற்றனா்.

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

SCROLL FOR NEXT