தூத்துக்குடி

22 மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை தேவை

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்த இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவா்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கல்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அந்தோணி மகாராஜா விசைப்படகில் சென்ற 12 மீனவா்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு விசைப்படகில் சென்ற 10 மீனவா்களுக்கு செப். 10ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

கல்பட்டி சிறையில் உள்ள 22 மீனவா்களையும் 2 விசைப்படகுகளையும் அபராதம் ஏதும் இல்லாமல் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT