கழுகுமலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, அதற்குரிய ஆணைகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
15 வாா்டுகளுக்காக கடந்த ஜூலை 22, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற முகாம்களில் 13 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மனுக்களை பெற்றுக்கொண்டனா். அவற்றில், சொத்து வரி, தண்ணீா் வரி பெயா் மாற்றம் தொடா்பாக வந்த 17 மனுக்களை மீது விசாரணை நடத்தி, ஆவணங்களை சரிபாா்த்து பெயா் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான ஆணைகளை பேரூராட்சி துணைத் தலைவா் அ. சுப்பிரமணியன் பயனாளிகளிடம் வழங்கினாா். செயல் அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா், அலுவலா்கள் உடனிருந்தனா்.