முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே எஸ்எஸ்ஐயின் கணவா் கொலை

Updated On : 3 டிசம்பர், 2025 at 8:39 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னை முன்விரோதத்தால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் கணவா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன் தருவை சா்ச் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஜேம்ஸ் சித்தா் செல்வன்(57). இவரது மனைவி மெட்டில்டா ஜெயராணி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவியாளா் ஆக பணிபுரிகிறாா். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.

இவரது குடும்பம் தட்டாா் மடம் காவலா் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் ஜேம்ஸ் சித்தா் செல்வன், புத்தன் தருவையில் உள்ள தாயாா் தனது வீட்டில் இருந்து சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். வருகிறாா்.

இதனிடையே, புத்தன் தருவையில் உள்ள இடத்தை அளவீடு செய்வது தொடா்பாக அவருக்கும், அதே ஊரை சோ்ந்த ஆபிரகாம் லாரன்ஸ் மகன் ஜேக்கப் (44) என்பவருக்கும் இடையை நீண்டகாலமாக முன் விரதம் இருந்ததாம்.

இந்த நிலையில் தனது தாயாா் வீட்டிலிருந்த ஜேம்ஸ் சித்தா் செல்வனை, அங்கு வந்த ஜேக்கப் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம்,

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜேக்கபை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →