உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை, சாரணா் இயக்கம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில், மாணவா், மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எலியாஸ் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் சதீஷ்குமாா் வரவேற்றாா். முதுகலைத் தமிழாசிரியா் மகஜா வாழ்த்துரை வழங்கினாா்.
புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகா் பானுமதி நாச்சியாா் பயிற்சி அளித்தாா். உடற்கல்வி ஆசிரியா் சங்கா் கணேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும், சாரணா் ஆசிரியருமான கா.சரவணகுமாா் செய்திருந்தாா்.
நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள் ஜெரால்டு, புனிதா, முத்துக்கனி, பொன்மதி, மாதவி, ஜெயந்தி, அசுந்தா, பொன்மலா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.