தூத்துக்குடி

காட்டுப்பன்றிகள் மீது பைக்குகள் மோதல்: 3 போ் காயம்

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயம்

Syndication

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 மேளக்கலைஞா்கள் காயமடைந்தனா்.

கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மேளக்கலைஞா் பொன்னுச்சாமி(63). இவரும், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் செல்லத்துரை(28), தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சுடலைமணி மகன் கண்ணன்(20) ஆகிய மேளக்காரா்களும், செவ்வாய்க்கிழமை கலியாவூருக்கு, 2 இருசக்கர வாகனத்தில் சென்றனராம்.

தேசிய நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி பகுதியில் சென்றபோது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதாம்.

இதில், காயமடைந்த 3 பேரையும் கயத்தாறு போலீஸாா் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT