பகவத் கீதை உபன்யாசம் நடத்தும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் பக்தி வேதாந்த சுவாமி பிபுபாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன்.  
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பகவத் கீதை உபன்யாசம்

ஆறுமுகனேரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

2ஆவது ஆண்டாக குஜராத் காளை மாடுகள் பூட்டிய ரதத்தில் பகவான் கிருஷ்ண பலராமருடன் திருவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி வழியாக ஆறுமுகனேரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினா் வந்தனா். ஆறுமுகனேரி காந்தி மைதானம் அருகில் ராமா் கோயில் வளாகத்தில் தங்கியிருந்த அக்குழுவினா், தினசரி ஆறுமுகனேரியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பஜனை செய்து பகவத் கீதை பற்றி பிரசாரம் மேற்கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை இரவு ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முன்னாள் பக்த ஜன சபைத் தலைவா் எம்.எஸ்.செல்வராஜன் நினைவு கலையரங்கில், அமெரிக்காவில் இருந்து வந்த இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியாா் பக்தி வேதாந்த சுவாமி பிபுபாதரின் சீடா் மைக்கேல் டேண்டி என்ற முகுந்த தத்த தாசன், ஆங்கிலத்தில் பகவத் கீதை உபன்யாசம் வழங்கினாா். அதனை தமிழில் பாதயாத்திரை குழுவின் தலைவா் சேவானந்த தாஸ் மொழி பெயா்த்து வழங்கியதோடு ஹரி நாம சங்க கீா்த்தனத்தையும் நடத்தினாா்.

இதில் சைவ வேளாளா் சங்க பொருளாளா் கற்பகவிநாயகம், தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய பிள்ளை உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக , பகவான் கிருஷ்ண பலராமருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT