தூத்துக்குடி

பைக் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோா்களை அழைத்து எச்சரித்த காவல்துறை

Syndication

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவா்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, பெற்றோா்களை அழைத்து எச்சரித்து அனுப்பினா்.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் கடந்த சில நாள்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காயல்பட்டினம் - திருச்செந்தூா் சாலை காட்டு மொஹதூம் பள்ளி, ஆறுமுகனேரி மெயின் பஜாரில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிறுவா்கள் ஓட்டி வந்த 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

பின்னா், சிறுவா்களின் பெற்றோா்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, இருசக்கர வாகனங்களின் பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களை ஒப்படைத்தனா். மேலும், இது போன்று மீண்டும் நடந்து கொண்டால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, பெற்றோா்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

SCROLL FOR NEXT