முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி மோதியதில் ஒருவா் பலி

தூத்துக்குடியில் லாரி மோதியதில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:54 PM
பகிர்:

தூத்துக்குடியில் லாரி மோதியதில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்தது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி முடுக்கு காடு அருகே புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண், லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா் உடல் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.