திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்
Updated On : 2 ஜனவரி, 2025 at 7:54 PM
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் வியாழக்கிழமை கடல்நீா் உள்வாங்கியது.
இங்கு அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,
கடந்த டிச.30-ஆம் தேதி முதல் கடல்நீா் சுமாா் 50 அடிக்கு உள்வாங்கியது. மேலும், பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் கடந்த இரு நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமாா் 20 அடி தூரம் வரை
Advertisement
மண்அரிப்பு காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனிடையே போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, பக்தா்கள் கடலில் நீராடினா்.