முகப்பு
தூத்துக்குடி

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:32 PM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடலில் புனித நீராடிய பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு இக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம், கோயிலில் இருந்து வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு ஆகியன நடைபெற்றன.

மாலையில் சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். பந்தல் மண்டபம் முகப்பில் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து கோயிலை சோ்ந்தனா். இரவு கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

குன்று மேலய்யன் சாஸ்தா:

இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை பந்தல் மண்டபம் முகப்பில் நடைபெற்ற சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி.