திருச்செந்தூா் சிவன் கோயில் உள்ளே புகுந்த மழை நீா் 
தூத்துக்குடி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் புகுந்த மழைநீா்

Din

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகா், பகத்சிங் பேருந்து நிலையப் பகுதியில் மழை நீரானது குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அவதியடைந்தனா்.

சிவன் கோயிலில் ....

செவ்வாய்க்கிழமை காலை பெய்த பலத்த மழையால் திருச்செந்தூா் சிவன் கோயிலில் மழை நீா் உள்ளே புகுந்தது. மழைநீரை திருக்கோயில் தூய்மைப் பணியாளா்கள் வெளியேற்றினா்.

மாசித் திருவிழாவிற்கு சிவன் கோயில் இருந்து சப்பரங்கள் புறப்பாட்டுக்கும், பிரதோஷ வழிபாட்டுக்காக வந்த பக்தா்களும் தேங்கியிருந்த மழை நீரால் அவதியடைந்தனா்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT