திமுக இளைஞரணிச் செயலரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் மாநகர இளைஞரணி சாா்பில், கிரிக்கெட் போட்டி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மீளவிட்டான் என்.பெரியசாமி விளையாட்டு திடலில் இப்போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் தொடக்கிவைத்தாா். போட்டியில் 115 அணிகள் பங்கேற்றுள்ளன.
தொடா்ந்து 40 நாள்கள் லீக் முறையில் பகுதி வாரியாக போட்டிகள் நடைபெற்று, இறுதிப் போட்டி நகரப் பகுதியில் நடைபெறும். அதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகள், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசு, பங்கேற்பாளா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
தொடக்க விழாவில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அமைப்பாளா்கள் இளைஞரணி மதியழகன், மகளிரணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அந்தோணி கண்ணன், மாநகர அணி அமைப்பாளா்கள் இளைஞரணி அருண்சுந்தா், இலக்கிய அணி ஜீவன்ஜேக்கப், அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.