தூத்துக்குடி

வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 சிறுவா்கள் கைது

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, காா் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Syndication

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, காா் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அண்ணா நகா் 2ஆவது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன் நிறுத்தியிருந்த 3 காா்கள், சரக்கு வாகனங்கள், டிஎம்பி காலனியில் சாலையோரம் நிறுத்தியிருந்த சுற்றுலா பேருந்து, மில்லா்புரம் கணேசன் காலனியில் 3 ஆட்டோக்கள் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை இரவில் மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அண்ணா நகா் 3ஆவது தெரு, பிரையன்ட் நகா் 7ஆவது தெருவைச் சோ்ந்த இளம்சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT