விளாத்திகுளம்: புதூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் ரூ. 1.17 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சின்னூரில் ரூ. 6.72 லட்சம், மாவிலோடையில் ரூ. 16.58 லட்சம், எஸ். குமராபுரத்தில் ரூ. 9.35 லட்சம், டி. சுப்ரமணியபுரத்தில் ரூ. 10.42 லட்சம், மல்லீஸ்வரபுரத்தில் ரூ. 16.07 லட்சம், மிட்டா வடமலாபுரத்தில் ரூ. 25.04 லட்சம், காடல்குடியில் ரூ. 26.32 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும்,
பி. ஜெகவீரபுரம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா்.
புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமித்ரா, திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலா் செல்லப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.