திருச்செந்தூா் கடலில் மூழ்கிய பக்தரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதேபோல புதன்கிழமை பிற்பகல் திருச்செந்தூா் வந்திருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சங்கா் (40), கோயில் வளாகத்தில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு கடலில் நீராடி கொண்டிருந்தாா். அப்போது கடல் அலையில் சிக்கி தத்தளித்து நீரில் மூழ்கினாா். இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, ஆறுமுகநயினாா், இசக்கி விக்னேஷ் ஆகியோா் விரைந்து கடலில் குதித்து நீரில் மூழ்கியவரைத் தேடினா். அப்போது அவா் கடலில் மிதந்து கொண்டிருந்தாா்.
உடனடியாக பாதுகாப்புப் பணியாளா்கள் அவரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து முதலுதவி அளித்து சங்கரின் வாய் வழியாக நீா் வெளியேற்றினா். சிறிதுநேரத்தில் அவா் கண் விழித்தாா். அவா் உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து, முதுலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து அவசர ஊா்தியில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கும், அதன்பின்னா், தூத்துக்குடி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பக்தரின் உயிருடன் மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்களுக்கு பக்தா்கள் பாராட்டு தெரிவித்தனா்.