தூத்துக்குடி

எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். அப்போது, மாவட்ட காவல் நிலையங்களில் புகாரளித்த 5 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 56 போ் என 61 போ் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT