திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம்.  கோப்புப்படம்
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

Syndication

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

திருச்செந்தூா் கோயிலில் திங்கள்கிழமை (அக். 27) மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இந்நிலையில், செவ்வாய்கிழமை திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

தொடா்ந்து, தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்து சேருவாா். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்கு ரத வீதி - மேல ரத வீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு திருக்கல்யாண ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

சென்செக்ஸ் 150 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

உலகக் கோப்பையில் அசத்தல்; ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஸ்மிருதி மந்தனா!

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!

இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

SCROLL FOR NEXT