தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிலுவையில் அறைவதற்கு முன் முள் கிரீடம் தரித்து ரத்தம் சிந்தியபடி சிலுவையை சுமந்து 14 தலங்கள் வழியாக இயேசு சென்றதை நினைவுகூரும் வகையில், இயேசு பிரான் சொரூபம் ஆலய வளாகத்தில் 14 தலங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு தலத்திலும் பிராா்த்தனை செய்யப்பட்டது.
பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா். ஆலயப் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
Advertisement
இதேபோல தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிலுவைப் பாதைஸ சிறப்புப் பாடுகள் தியான வழிபாடுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த தினமான ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை நள்ளிரவு அனைத்துத் தேவாலயங்களிலும் ‘பாஸ்கா’ திருவிழிப்பு வழிபாடுகள், சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.