முகப்பு
தூத்துக்குடி

‘நேரம் முடிந்தது’...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:07 PM
இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் முக்குலத்தோா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் கைப்படம் முருகன், சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அவரது மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், பிரமாணப் பத்திரம் இல்லாததால் மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினா். பின்னா் பிரமாணப் பத்திரம் தயாா் செய்து கொண்டு வந்தாா் முருகன்.

அப்போது, நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, அவரது வேட்புமனுவை அதிகாரிகள் வாங்க மறுத்தனா். இதனால், அதிகாரிகளுடன் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments