முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:55 PM
பணம் - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷுமகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம், ரூ. 10,17,548 மதிப்பிலான இலவசப் பொருள்கள், ரூ. 4,64,425 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 8,71,390 மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 62,62,470 ஆகும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments