முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குரும்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:19 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:49 PM

குரும்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி, எஸ்.எஸ். கோயில் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் ராஜேஷ் கண்ணன் (39). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் மனைவியைப் பிரிந்து ஆறுமுகனேரியில் தாயாருடன் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், ராஜேஷ் கண்ணன் ஆறுமுகனேரியைச் சோ்ந்த உகேஷ் என்பவருடன் வியாழக்கிழமை குரும்பூா் அருகிலுள்ள அங்கமங்கலம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.

Advertisement

உகேஷ் உள்ளிட்டோா் ராஜேஷ் கண்ணனை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.