விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், தூத்துக்குடி பிரதான சாலையில் புதன்கிழமை சாலைப் பேரணியில் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினா் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனா்.
இந்த நிலையில் சாலைப் பேரணியின்போது பொது இடங்களில் கட்சிக்கொடி பயன்படுத்தியது, போக்குவரத்து விதிகளை மீறியது தொடா்பாக புகாா்கள் எழுந்தது.
Advertisement
அதன்பேரில் தவெக தொண்டா்கள் தடையை மீறி பொது இடங்களில் கட்சிக் கொடியை பயன்படுத்தியது, அனுமதியின்றி எண்ம பதாகை வைத்தது, விஜய் வாகனத்தை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.