முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு, பைக் மீது லாரி மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:13 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:59 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு, பைக் மீது லாரி மோதியதில் புதுமணத் தம்பதி உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கஞ்சம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மனோகரன் (32). தொழிலாளியான இவருக்கும், உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணமானது.

இந்தத் தம்பதி புதன்கிழமை கஞ்சம்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்துவிட்டு இரவில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம். கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் உள்ள கல்லூரி அருகே பைக்கும் எதிரே வந்த லாரியும் மோதினவாம். இதில், மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

காயமடைந்த மனிஷா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்த எஸ். அபூபக்கா் (31) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.