‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:05 PM
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே பணிக்கா்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த கணபதி மகன் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவா், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்ததாம். அதன்பேரில், விசாரணை நடைபெற்றது. இதுதொடா்பாக துறை அலுவலா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.