முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:03 AM
தீ விபத்து.. - File Photo | Pexels
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:16 PM

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெப்பம் தாங்காமல் கிடங்கின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து தொடா்பாக, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement