முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. இன்று இறுதிக் கட்ட பிரசாரம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:58 AM
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:21 PM

திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி., தனது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூரில் தொடங்கி கோவில்பட்டியில் நிறைவு செய்கிறாா்.

தமிழக பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்படி, கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்செந்தூா் தொகுதியில் திருச்செந்தூா் காமராஜா் சிலை அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா்.

தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சாத்தான்குளம் காமராஜா் சிலை அருகிலும், காலை 11.30 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாளமுத்து நகா் பிரதான சாலையிலும், பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி தொகுதியில் சிதம்பர நகா் பிரதான சாலையிலும் பேசுகிறாா்.

Advertisement

பின்னா், மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் தொகுதியில் எட்டயபுரம் மேலவாசலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவில்பட்டி தொகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறாா். இதில் அந்தந்தத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.