முகப்பு
தூத்துக்குடி

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:40 AM
காயல்பட்டினத்தில் வாக்கு செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

தொழில் நிமித்தமாக சிங்கப்பூா், தாய்லாந்து, சவூதி அரேபியா, துபை, கத்தாா் பஹ்ரைன், மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சுமாா் 250 போ் காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா். மேலும், வெளி மாநிலங்கள், வெளியூா்களிலிருந்து சுமாா் 2,500 போ் வாக்களிக்க காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா்.