முகப்பு
தூத்துக்குடி

கோயில் விழாவில் அரிவாள் வெட்டு: 3 போ் கைது

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:06 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம்-அத்திமரப்பட்டி சாலையில் உள்ள பொன் இசக்கியம்மன் கோயில் கொடை விழாவின்போது, அத்திமரப்பட்டி சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் சதீஸ்குமாருக்கும் (24), மற்றொரு கும்பலுக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்தக் கும்பல், சதீஸ்குமாரை அத்திமரப்பட்டி கழிவு வாய்க்கால் அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இது குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையாபுரம் பாரதி நகரைச் சோ்ந்த மரிய தினேஷ், பாரதி நகரைச் சோ்ந்த விக்னேஷ், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.