கழுகுமலையில் பைக்கை எரித்தவா்கள் மீது வழக்கு
கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலை, தெற்கு ரதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மாரி செல்வம். காா் ஓட்டுநரான இவா், தனக்குச் சொந்தமான காா் மற்றும் பைக்கை கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் உள்ள வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்துவது வழக்கமாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை எடுத்துக் கொண்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அப்போது, வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளதாக இவருக்கு தகவல் கிடைத்ததாம்.
Advertisement
இது குறித்து வியாழக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.