முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 12:43 AM
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:35 PM

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் மகன் தடிகாரன் (20). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையிலிருந்து அல்லிகுளத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது மேலக்கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

Advertisement

இதில், தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.